2025 மே 07, புதன்கிழமை

போஷாக்குணவு வழங்கும் நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குணவு வழங்கும் நிகழ்வு, மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் இன்று (06) நடைபெற்றது.

ஓட்டமாவடி கல்விக் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கு, இவ்வாண்டுக்கு உத்தியோகபூர்வமாக சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வாகவே இது நடைபெற்றது.

மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ. ஜிப்ரி கரீமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X