2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மோட்டர் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளப் பிரதேசத்தில்; வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டொன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நீர் வழங்குவதற்காக கிரான்குளம் பிரதான வீதியில் கிடங்கு தோண்டிக்கொண்டிருந்தபோது இந்தக் குண்டு தென்பட்டுள்ளது.  

இது தொடர்பில் பொலிஸாருக்கு ஊழியர்கள் தகவல் வழங்கியதை அடுத்து,  இக்குண்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X