2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மஞ்சந்தொடுவாயில் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியிலுள்ள வீடொன்று இரவு தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஞாயிற்றுக்கிழமை (13) இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் வீட்டினுள் மெழுகுதிரியை ஏற்றிவிட்டு, அவ்வீட்டிலுள்ளவர்கள் வீட்டு முற்றத்தில் இருந்துள்ளனர்.

இதன்போது, மெழுகுதிரி எரிந்து அங்கிருந்த பொருட்களில் தீப்பிடித்துத்கொண்ட நிலையில் வீடு எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. வீட்டிலிருந்த கட்டில், அலுமாரி, கதிரைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X