Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைப்பதற்கு கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை குடிவரவு -குடியகல்வுத் திணைக்களம் தென்மாகாணத்தில் மாத்தறை நகரிலும் மத்திய மாகாணத்தில் கண்டி நகரிலும் வடமாகாணத்தில் வவுனியா நகரிலும் பிராந்திய காரியாலயங்களாக அமைத்து மாகாண மட்டத்தில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கையை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. இதனால், மேற்குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் பெரும் நன்மை அடைந்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண மக்கள், கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு நகருக்கு நீண்டதூரம் பிரயாணம் செய்து பல சிரமங்களுக்கு மட்டுமல்லாது நேரம் மற்றும் பணத்தையும் விரயம் செய்து வருகின்றனர்.
எனவே, கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் மத்திய மாவட்டமாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இலங்கை குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் காரியாலயத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்க உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன ஆகியோரிடமும் கிழக்கு மாகாணசபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை தன்னால் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கான தீர்மானம் கிழக்கு மாகாண சபையால் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பணிமனையையும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பணிமனையையும் கிழக்கு மாகாணத்துக்கு மத்தியாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே குடிவரவு -குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைய வேண்டும்' என்றார்.
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
17 minute ago
23 minute ago