Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (22) இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் கவனக்குறைவாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரயில்வே அதிகாரிகள் 4 பேரை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலுடன், ரயில் எஞ்;ஜின் ஒன்று வந்து மோதி விபத்து இடம்பெற்றது. இதன் காரணமாக குறித்த எஞ்ஜின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன், ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும் சேதமடைந்தன.
இவ்விபத்துத் தொடர்பில் உள்ளக விசாரணையை செய்த ரயில்வே அதிகாரிகள், போக்குவரத்து அணுகுதலுக்குப் பொறுப்பாகவிருந்த ரயில்வே அதிகாரி ஒருவரும் எஞ்ஜின் சாரதிகள் 3 பேரையும் இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
17 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago