Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகரசபையில், இன்று (01) நடைபெற்ற 11ஆவது சபை அமர்வின் போது, மட்டக்களப்பு மாநகரத்துக்கென ஒரு தினத்தை நியமித்து, அதனை “மீன்பாடும் தேன் நகரம் – மட்டு. நகர் தினம்” எனப் பிரகடனப்படுத்தவதற்கான அனுமதி நிறைவேற்றப்பட்டது.
மேயர் தி.சரவணபவனால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், சபையின் ஏகோபித்த ஆதரவுடன், அத்தினத்தைப் பிரகடனப்படுத்தவதற்கான அனுமதி நிறைவேற்றப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நலன்விரும்பியொருவரின் கோரிக்கையின் பிரகாரம், மாநகர சபை கலை, கலாசாரக் குழுவின் தலைவர் வே.தவராஜாவால், இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில், மட்டக்களப்பு மாநகரசபையின் கலை கலாசாரக் குழுவின் தலைவர் தெரிவிக்கையில், மிகப் பாரம்பரிய கலாசார விழுமியங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பின் விசேட அம்சங்களை கருத்திற்கொண்டு, இம்மாநகரத்துகக்கென ஒரு தினத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென்றார்.
மாவட்டம், மாநகரம் சார்ந்த கலை வல்லுநர்கள், பற்றாளர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள், கல்விமான்கள் உட்பட சான்றோர்களை உள்ளடக்கியதாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு, மட்டக்களப்பு மாநகர பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை, மட்டு. நகர் தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரி நின்றார்.
இதன்போது, எமது மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் அமசங்கள், கலை கலாசார பண்பாட்டு விடயங்கள் என்பன உள்ளடங்களாக மேற்படி தினமானது, இரண்டு நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் எனவும் அவர் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, கல்விசார் உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளைப் பெறுவதும் சிறப்பானதாக அமையும் என்பதோடு, கலந்துரையாடல்களின் பின்னர் மட்டு. நகர் தினம், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, மாநகர மேயர் தெரிவித்தார்.
இதற்கு, சபை ஏகமனதான அங்கிகாரத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025