2025 மே 21, புதன்கிழமை

மயங்கி விழுந்தவர் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி பிரதேசத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்று கொண்டிருந்தவர், மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தனியாக வாழ்ந்து வந்த ஆரையம்பதி எல்லை வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை மாசிலாமணி (வயது 74) என்பவரே மரணித்தவராவார்.

இவர், மேற்படி எல்லை வீதியூடாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவ்விடத்தில் நின்றவர்களால், ஆரையம்பதி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .