Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுணதீவிலிருந்து காத்தான்குடிக்குடிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திய இருவரை, மட்டக்களப்பு மாவட்ட ஊழல் மற்றும்மோசடி ஒழிப்புப் பிரிவினர், இன்று(01) கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் பணிப்பின் பேரில், ஊழல் மோசடி ஒழிப்பு பிரிவு மாவட்டப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்கவின் தலைமையிலான பொலிஸ்குழுவினர் கொக்கட்டிச்சோலை சந்தியில் வைத்து, இந்தக் கைதை மேற்கொண்டுள்ளனர்.
டிமோ பட்டா லொறியிலிருந்து கடத்திவரப்பட்ட 5 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மாடுகள், கைப்பற்றப்பட்ட லொறி என்பன கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago