Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராகேணிக் கிராமத்திலுள்ள தோட்டவாடியும் அந்தத் தோட்டத்தில் நடப்பட்டிருந்த பயன்தரும் மரங்களும் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என, பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் ஒருவரின் தோட்டக் காணியிலேயே திங்கட்கிழமை (26) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் அக்காணி உரிமையாளர் இன்று காலை முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, கடந்த மாதமும் இக்கிராமத்தில் இவ்வாறு மற்றொரு தோட்டமும் அதன் வேலிகளும் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான சம்பவம் இன முறுகலை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியா அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றவையா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
18 minute ago
32 minute ago