2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ரயிலுடன் மோதி இளைஞன் பலி

Janu   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில்  வைத்து ரயிலுடன் மோதி இளைஞன்  ஒருவன்  உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (25)  இரவு 11 மணியவில் இடம்பெற்றுள்ளது . 

கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய  அசோக்குமார் சனுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கருவப்பங்கேணி பகுதி தண்டவாளத்தில் வைத்து ,   மட்டக்களப்பில் இருந்து கொழும்பை நோக்கி  பயணித்த இன்டசிற்றி  ரயிலுடன் மோதியதிலேயே  இவ்  விபத்து இடம்பெற்றுள்ளது

மேலும்  உயிரிழந்தவரின் சடலம்  மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம்  தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை மட்டு.  தலைமையக பொலிஸார்  முன்னெடுத்துவருகின்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X