2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற மட்டக்களப்பு டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச்சபை பஸ், எரிபொருள்  நிரப்புவதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியின் பின்னால் மோதியது. தனியார் பஸ் அதற்கு முன்பாக நிறுத்தியிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இ.போ.ச பஸ்ஸில் பயணத்த இருவர் காயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் காத்ததான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X