Niroshini / 2016 மே 21 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கோவிந்த வீதியின் சிறைச்சாலை சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இதேபோன்று இருதயபுரம் -மாமாங்கம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துகளின்போது படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
19 minute ago
22 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
42 minute ago
1 hours ago