2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நான்கு பேர்
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (13)  இரவு நாடு முழுவதும் மின்சாரத்தடை  ஏற்பட்டிருந்த  வேளையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்;கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர். இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும்  ஒன்றுடனொன்று மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

களுதாவளையிலிருந்து படுவான்கரை நோக்கிச் சென்ற 41 வயதுடைய தந்தையும் அவரது இரண்டரை வயதுடைய மகளான டேவி ரக்ஷனனியாவுமே காயமடைந்துள்ளனர்.  

இதேவேளை, வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்குடி பள்ளிவாசலுக்குச் சென்ற
தந்தையும்  அவரது நான்கு வயது மகளான  எம்.மக்பா என்பவருமே காயமடைந்துள்ளனர்.

இவர்களில் இரண்டரை வயதுடைய பெண் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக   மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X