Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 07 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரை பொலிஸாரின் மத நல்லிணக்க சேவையைப் பாராட்டி, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் விருது வழங்கி வைக்கப்பட்டதாக, அதன் இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் கத்தோலிக்கர் அல்லாத வேறு மதப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மயானக் காணி பெற்றுக்கொடுப்பதில் முன்னின்றுழைத்த அலுவலர்கள் பட்டியலில் வாகரைப் பொலிஸாரின் சேவையும் பாராட்டப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, இவ்விருது வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வாகரைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்ற இந்நிகழ்வில், வாகரைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் உட்பட அதன் சர்வமத உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago