2025 மே 14, புதன்கிழமை

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

கனகராசா சரவணன்   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி, நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது, நேற்று (15) தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 24, 30 வயது இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் ​குறித்துத் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் சம்பவதினத்தன்று காலை 10.30 மணிக்கு விசாரணை ஒன்றுக்காக மேற்படி இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விசாரணையில் ஈடுபட பொலிஸார் முற்பட்டபோது அங்கிருந்த மூவர், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து நடத்திய தேடுதலில் இவ்விளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, தப்பியோடிய நபரைக் கைதுசெய்யும் நடவடிக்கையையும் மேற்கொள்டு வரும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .