Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் பிள்ளையாரடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், நேற்று (19) மாலை உயிரிழந்ததாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கூழாவடிப் பகுதியைச் சேர்ந்த யாதவன் மஹரிஷி (வயது 25) என்ற இளைஞனே, விபத்தில் உயிரிழந்துள்ளார்
கதுறுவெலயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ்ஸின் கீழ்ப் பகுதியில் மேற்படி இளைஞன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்றப் போது, மழை பெய்து கொண்டிருந்தமையால், பிள்ளையாரடி, வாவிக்கரை வீதி வழுக்கியதில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
3 hours ago