Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எ.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினகீழ், மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில், மாநகர சபையின் நிதியொதுக்கீட்டின் மூலம் சுமார் 30 வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லை வீதியையும் பார் வீதியையும் இணைக்கும் 160 மீற்றர் நீளமான வீதி, கொங்க்ரீட் வீதியாகப் புனரமைக்கும் பணிகள், மாநகர யேர் தியாகராசா சரவணபவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் வேண்டுகோளின்பேரில் இவ்வீதி புனரமைக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .