Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.செல்வராஜ்
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில், 14வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும், மாணவியின் சிறிய தந்தையை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (06) கைதுசெய்துள்ளனர்.
மாணவியின் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் மேற்படி நபரை, கைதுசெய்துள்ளனர்.
மகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த தாய், அது குறித்து வினவியுள்ளார். இதன்போதே, சிறிய தந்தை தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குறித்த மாணவி தாயிடம் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் ஒரு குழந்தையின் தந்தையெனவும் பல மாதங்களாகவே குறித்த மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
3 hours ago