2025 ஜூலை 02, புதன்கிழமை

மாத்தளையில் இரு தானசாலைகளுக்கு தடை

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்தர விராஜ் அபேசிறி

பொசன்  பௌர்ணமி தினத்தையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாத்தளையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு தானசாலைகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகர சபையின் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே மேற்படி இரு தானசாலைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் 5 தானசாலைகளில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு அவை தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

மாத்தளை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் 45 தானசாலைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .