Kogilavani / 2015 ஜூன் 03 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் குளிர்பானத்தில் விசம் கலந்து கொலை செய்த இளைஞனுக்கு (மகன்) எதிரான வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணை எடுத்துகொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அயிராங்கனி பெரேரா தீர்மானித்தார் .
வெள்ளவத்தை தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு உணவில் விசம் கலந்து கொடுத்து தன் தந்தையான குமாரசாமி, ஐயப்பன் பூமதி (தாய்) மற்றும் அனிதா பிரியா (சகோதரி) ஆகிய மூவரையும் கொலைச்செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஹட்டன்- கொட்டக்கலை க்ளையார் தோட்டத்தில் வசித்த அவர்களது மகனான குமாரசாமி பிரசாந் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நீண்டகாலமாக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் உயர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய 25,000 ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
19 minute ago
20 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
37 minute ago
47 minute ago