2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வருக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபை புலனாய்வு அதிகாரிகளும் மானிப்பாய் பொலிஸாரும் இணைந்து சுதுமலை, கட்டுடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு சோதனை செய்தனர்.

இதன்போது, பிரதான மின்வடத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவரும், மின்மானியின் சுழற்சியை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X