2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கண்டி எசலபெரஹெரா ஆகஸ்ட் 20 ஆரம்பம்

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம்.ரிஃபாத்
 
வரலாற்று சிரப்புமிக்க கண்டி, எசலபெரஹெரா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எசல பெரஹெரா தொடர்பான ஆலோசனை கூட்டம் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றது.  

இப்பெரஹெராவை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கண்டியிலுள்ள நான்கு தேவாலயங்களிலும் காப்புக்கட்டும் நிகழ்வு நடத்தப்படுமென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.   

இதேவேளை, இப்பெரஹெராவுக்கு வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிட்டிசேகர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தியவதனநிலமே திலங்க தேல பண்டார மற்றும் பௌத்த பிக்குகள்,பொலிஸார் உட்பட திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X