Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம், எஸ்.சுதர்ஷினி, வி.நிரோஷினி
பாடசாலைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு மதிப்பளித்து, அவர்களையும் ஆசிரிய சமூகத்துடன் இணைத்துக்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர், வீ.இராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
'தமிழ் பாடசலைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆசிரியர்களை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மட்டந்தட்டுவதாக தெரியவருகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள பாடசாலை அதிபர்களுக்கான கூட்டத்தின்போது, இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
'இதுவரை உதவி ஆசிரியர்கள் மட்டந்தட்டப்படுகின்றார்கள் என்ற எந்தவொரு முறைப்பாடும் எழுத்தும் மூலம் எமக்கு கிடைக்கவில்லை. எழுத்து மூலம் கிடைக்கப்பெற்றிருந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருக்கலாம்' என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது பெருந்தோட்ட பாடசாலைகளில்; நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்வர்களை நியமிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள 963 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இம்மாத இறுதிக்குள் அந்தந்த மாகாணங்களுக்கேற்ப ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களானது கடந்த 2013ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் நிலவிய வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் முகமாகவே வழங்கப்படுகின்றன.
வெகுவிரைவில் 2014, 2015ஆம் ஆண்டுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுப்பேன்' என்றார்.
இதேவேளை, பெருந்தோட்ட பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறு அனைத்து கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலுள்ள வறுமையான பாடசாலைகளில் கொண்டுவரப்பட்டுள்ள பகல்போஷண திட்டத்தை, இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago