2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் பெண் படுகாயம்

Sudharshini   / 2015 ஜூன் 17 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தோட்டத்தில், இன்று (17) காலை  கொழுந்து பறிக்கச் சென்ற பெண் ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார் எனவும் சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவே குறித்த மரக்கிளை முறிந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வள்ளியம்மா என்ற 49 வயதுமதிக்கத்தக்க பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .