2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆடைகளை திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது

Kogilavani   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வீடொன்றுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க ஆடைகளை திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞனை அலவத்துகொடை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.

கண்டி-அங்கும்புரை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில் வீட்டினுள் புகுந்த மேற்படி இளைஞன் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகளை திருடியதுடன் அவற்றை அக்குறணை நகரிலுள்ள கடைகளுக்கு விற்பதற்கு முயற்சித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர்கள் ஆடைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மேற்படி இளைஞன் (வயது 18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர்;, சிலகாலம் பிக்குவாக இருந்தவர் என்றும் பின்னர் அதிலிருந்து வெளியேரி உள்ளதாகவும் இதற்கு முன் ஒரு வீட்டை உடைத்து பொருட்கள் திருடிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றவாளி எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .