2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெருந்தோட்ட சமூகத்தை சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது: மாரிமுத்து

Kogilavani   / 2015 ஜூன் 18 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு அளப்பரிய பங்குதாரர்களான பெருந்தோட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை, ஏனைய சமூகத்தைவிட, ஒரு வித்தியாசமான சூழலில் காணப்படுவதால் அதனை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக உப தலைவரும பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின்; பொதுச் செயலாளருமான சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

இலங்கை தோட்ட பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களிலும் அவர்களது அபிலாசைகளிலும் நாம் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மலையகத்தை பொறுத்தமட்டில் கடும் வரட்சி காலங்களில் தேயிலை இறப்பர் தோட்டங்கள் பாதிப்படைகின்றன. பசுமையும் செழிப்பையும் இழந்து விடுகின்றன.

தேயிலை தோட்டங்களில் போதியளவில் கொழுந்துகளை எதிர்பார்க்க முடியாது வரையறுக்கப்பட்ட எடையையும் பெற்றுகொள்ள முடியாது. அதனால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைகின்றன. சம்பளத்திலும் வீழ்ச்சி ஏற்படுகிறது.

இதனால் சம்பள நிர்ணயம், வேலை நேரம், தொழில்சார் பாதுகாப்பும் சுகாதாரமும் மற்றும் மகப்பேற்று போன்ற விடயங்கள் சற்று ஆழமாக உள்வாங்கப்பட்டு ஆராய்ந்தறிந்து அதற்கான காத்திரமான தீர்வை ஏற்படுத்த சர்வதேச தொழில் ஸ்தாபனத்தால், நியமிக்கப்பட்ட தொழில் சங்க பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள், அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முன்வர வேண்டும்.

இதேவேளை இலங்கையின் தோட்டப்பகுதிகளில் மகப்பேற்று வசதிகள் பரந்தும் விரிந்தும் உயர்நிலைப்பட்டு விஸ்தரிக்கப்பட வேண்டும்' என்றார்.

ஜெனிவா மகாநாட்டின் 'தொழில் பாதுகாப்பு வரைவு குழுக்கு' ஆசிய பிராந்தியத்திற்கான அங்கத்தவராக சட்டத்தரணி மாரிமுத்து நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவுக்கு ஐக்கிய இராஜியம், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஐஸ்லேண்ட், கனடா, இலங்கை ஆகிய நாட்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .