2025 ஜூன் 28, சனிக்கிழமை

'தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெறும்'

Kogilavani   / 2015 ஜூன் 19 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் தேர்தல் எவ்வாறான முறையில் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வெற்றியை  ஈட்டும் என  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல   தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தேர்தல் முறையை மாற்றி அமைக்க ஐ.தே.க. என்ற வகையில் நாங்கள் விரும்புகிறோம். 2015 இல் இருந்து மாற்றம் ஏற்படுத்துவதையும் விரும்புகிறோம். ஆனால், ஒரு சில சிறிய கட்சிகள் தமது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாமல் போகும் என்பதற்காக பயப்படுகின்றனர். ஆனால் அனைத்து கட்சிகளும் ஒரு முடிவுக்கு வருவார்களாயின் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

உறுப்பினர் தொகையை கூட்ட அல்லது குறைக்க இந்நாட்டு மக்களுக்கு உரிமை இல்லையா என்று நான் கேட்க விரும்புகிறேன். அடிக்கடி நாடாளுமன்றத்தில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான முரண்பட்ட கருக்களை தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு 225 உறுப்பினர் என்ற பழைய முறைக்கு விருப்பம் என்று கூறுகின்றனர். இன்னும் சில தினங்களில் 237 என்றும் 260 என்றும் இப்படி அடிக்கடி தொகை மாற்றப் படுகிறது.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகிவிட்டது தேர்தலில் தோல்வி அடைந்து மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.  

தோல்வி அடைந்த அல்லது நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு போராடுவது என்னைப் பொறுத்தவரை கவலையாக உள்ளது. தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று நடந்தால் அவர்களால் 30 ஆசனங்களைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாது போகும்.

மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகப் பாடுபட்ட சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க.யில் டிக்கட் கேட்டு எமது பின்னால் அலைகின்றனர்.  ஐ.தே.க. எப்போதும் வீPட்டுத்திட்டங்களுக்கு முனனுரிமை கொடுத்த ஒரு கட்சி.  

ஆனால் மகிந்த சிந்தனையில் ஒரு தேர்தல் தொகுதிக்கு 25 வீடுகள் அமைப்பதாகக் கூறிய போதும் ஒரு வீடு கூட அமைக்கபடவில்லை, ஆனால் மகாராஜாக்களுக்கு நாட்டிலுள்ள சகல நகரங்களிலும் ஆடம்பர மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வறுமைக்குட்பட்ட மக்களின் பணத்தை கொண்டு வரிய மக்களுக்கு வீடுகளை அமைக்காது அரசர்களுக்கான மாளிகைகள் அமைக்கப்பட்டதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் பொதுமக்களுக்காகச் செய்யப்படவில்லை' என இதன்போது தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .