2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மன்னரின் கேசத்தை தேடிய 9 பேருக்கு அபராதம்

Kogilavani   / 2015 ஜூலை 10 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

மன்னரின் கேசத்தை தேடி புதையல் தோண்டிய 9 பேருக்கும் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்துமாறு தம்புள்ளை நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ ரம்ய ஸ்ரீ, புதன்கிழமை(8) உத்தரவிட்டார்.

கலேவெல பேலியகந்த என்ற இடத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி ஒன்பதுபேரும் செவ்வாய்க்கிழமை (7) கைதுசெய்யப்பட்டனர்.   

இவர்கள் மன்னர் காலத்து முடியை கண்டெடுக்கும் பொருட்டே புதையல் தோண்டியதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர்கள், நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டபோது,  தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .