Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்யிட்டதனாலேயே தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரிஸின் உபதலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
எதிர்வரும் பொது தேர்தலில் கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் இரண்டு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டே வரலாறுகளே உள்ளன. இந்த வரலாற்று தவரை மீண்டும் தமிழ்மக்கள் செய்யக்கூடாது. இதனால்தான் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரு இலட்சம் தமிழ் வாக்குகளுடாக மக்கள், இலங்கை தொழிலார் காங்கிரஸின் இரண்டு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்' என அவர் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
48 minute ago
1 hours ago