Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறையில் நிலவிவரும் போராட்டங்களை தொடர்ந்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனத்தைச் சேர்ந்த 23 கம்பனிகளின் பிரதிநிதிகளும் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் என்பன கலந்துகொண்டிருந்தன.
இதன்போது தொழிற்சங்கங்கள், 'பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தை 650 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனவும் இதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை எனவும் முதலாளிமார் சம்மேளனத்தை வலியுறுத்தியுள்ளன. தொழிலாளர்களுக்கு வரவுத் தொகையாக 250 ரூபாயும் மேலதிக கொழுந்து நிறைக்கு 35 ரூபாயும் தேயிலை, இறப்பர் விலைக்கேற்ப 30 ரூபாவும் வழங்கப்படவேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, 'தற்போது தேயிலை இறப்பரின் விலை மிகவும் மோசமாக குறைந்துள்ளதாகவும் தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தோட்டக் கம்பனிகள் தெரிவித்துள்ளன.
தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதென்றால் அது உற்பத்தியின் அதிகரிப்போடு சம்பந்தப்பட்ட வருமான அதிகரிப்பாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தோட்டக் கம்பனிகள் முன் வைத்துள்ளன'
இவர்களது இக்கூற்றை மூன்று தொழிற்சங்கங்களும் முற்று முழுதாகவே நிராகரித்து தொழிலாளர்களது சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தோட்ட கம்பனிகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என வலியுறுத்தியதாக தெரியவருகிறது.
இந்நிலையில், எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீர்வுக்காணுமாறு முதலாளிமார் சம்மேளனத்தை தொழில் அமைச்சு வலியுறுத்தியதாக தெரியவருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி தீர்வு எட்டப்படுமென தொழிற்சங்கங்களில் பிரதிநிதிகள் உறுதியாக கூறியுள்ளனர்.
கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து தினங்களாக மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன் இதனை கருத்திற்கொண்டு தோட்ட அதிகாரிகளும் தமது பணிபகிஷ்கரிப்பை மேறகொண்டு வருகின்றனர்.
இதனால், தொழிலாளர்கள் பறித்த கொழுந்துகள் அனைத்தும் கடந்த மூன்று தினங்களாக கொழுந்து மடுவங்களில் எடுப்பாரின்றி கிடப்பில் போட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
58 minute ago
1 hours ago