Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். செல்வராஜ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் இடையில் நல்லுறவு தொடர்ந்த வண்ணமேயுள்ளது. அந்த நல்லுறவின் பயனாக மேலும், 3,000 தமிழர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்க நவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மடுல்சீமையில் புதன்கிழமை(5) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கு உயர்வான சம்பளம் பெற்றுகொடுக்கப்படுமாயின் முதலில் மகிழ்சியடைபவன் நான்தான். ஆனால், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் 23,500 ரூபாய் பெற்றுக்கொடுப்பேன் என்று கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை.
கடந்த ஆட்சியின் போது இ.தொ.கா எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாகவே 3,000 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. அதற்கமைய புதிய ஆட்சியின் போது ஒருதொகுதி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இந்நியமனத்தில் ஊவா மாகாணத்தில் 599 பேர் உள்வாங்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 23,500 ரூபாய் சம்பளத்தை பெற்றக்கொடுப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆசிரியர் உதவியாளர்ளுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளம், வர்த்தமானியில் குறிப்பிட்டிருந்தப்படியே வழங்கப்பட்டது.
எனவே, கூடுதல் சம்பளம் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக கூறப்பட்ட கூற்றிலும் எவ்வித உண்மையும் இல்லை.
புத்திஜீவிகளான ஆசிரியர் சமூகத்தையே ஏமாற்றிய இவர்கள், பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உதவி ஆசிரியர்களுக்கான கூடுதல் சம்பளம் தொடர்பான உண்மை நிலையை அறிந்துக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுகி வினவிய போது, வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உதவி ஆசிரியர்களுக்கு நியமன் வழங்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டனர். சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மேலும் குறிப்பிட்டனர்' என்றார்.
'100 நாட்கள் வேலைத்திட்டத்;தில் பெருந்தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அக்கரையுடனும் உணர்வுபூர்வமாகவும் செயற்படும் அமைப்பு என்றால் அது இ.தொ.கா மட்டுமே' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .