2025 மே 05, திங்கட்கிழமை

74 பேர் தி​டீரென மயங்கியதால் பல்லேகலையில் பதற்றம்

Editorial   / 2021 ஜூன் 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-பல்லேகல பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்தே இவ்வாறான பதற்றமான நி​லைமை​யொன்று ஏற்பட்டுள்ளது.

வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே இவர்கள், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகவீன மடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்ட​தற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X