Janu / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரம் இருக்கின்றமையினால், தொடர்ச்சியாக வைத்தியாசலையில் இயக்க முடியாது எனவும் , உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் வரை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மாத்திரமே வைத்தியசாலை இயங்குமெனவும் அறிவித்தலை உள்ளடக்கிய சுவரொட்டி ஒன்றை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையின் முன்றலில் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி இவ் வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செ.தி.பெருமாள் , காமினி



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .