2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம், ரஞ்சித் ராஜபக்ஸ

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளுள் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையுள்ள சகல பாடசாலைகளையும் இன்று (25) முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று (24) திகதி காலை முதல் ஆரம்ப பிரிவு கொண்ட பாடசாலைகளில்
வகுப்பறைகளையும்,சுற்றுப்புற சுழலினை துப்புறவு செய்யும் பணிகளில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து ஈடுப்பட்டனர்.

சில பாடசாலைகளில் வகுப்பறைகள் தொற்று நீக்கம் செய்து சுத்தப்படுத்தப்பட்டதுடன்
பெற்றோர்களால் விசேட சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.



இதுகுறித்து ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், ஹட்டன் கல்வி வலயத்தில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று, தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல 134 பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .