Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
விசாரணையின் பேரில், பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை அழைத்துச் செல்லப்பட்ட இந்திய பிரஜைகள் நால்வரினதும் விசா மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் காண்பிக்கப் பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிஸார் புதன்கிழமை விடுவித்தனர்.
பண்டாரவளை பகுதிக்கு உட்பட்ட ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்குறிப்பிட்ட நால்வரையும், பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர்கள் நால்வரும் அமைதிக்காத்துள்ளனர்.
பொலிஸார், சிங்கள மொழியில் பேசியதால், பொலிஸாரின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாமல் போயுள்ளது. இந்நிலையில், அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலய பரிபாலன சபையின் குறித்த நால்வரதும் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்படி நால்வரையும் விடுவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago