2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரு பேருந்துகள் மோதி, 21 பேர் காயம்

Janu   / 2025 ஜூலை 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி வீதியின்  கலிகமுவ அம்பன்பிட்டிய பகுதியில் திங்கட்கிழமை (21) காலை நிகழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்ததாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்தவர்களில் 19 பேர் கேகாலை பொது மருத்துவமனையிலும், இருவர் வரகாபொல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 கேகாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்து, வேரகொட பகுதியிலிருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 என்.ஆராச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .