2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இருவேறு பகுதிகளில் விபத்து; இருவர் படுயாகம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக், ஆ.ரமேஸ்

மலையகத்தில் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட வான் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஜாபிட்டிய ஓவிஸ்ஸ பகுதியில் நேற்று (18), வான் ஒன்று ஆற்றுக்குள்  விழுந்து வித்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பயணித்துள்ளனர். ஏனைய ஐவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  தலவாக்கலை, மேல்கொத்மலை புதிய வீடமைப்பு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மூவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X