2025 மே 15, வியாழக்கிழமை

இரட்டைக் கொலைக் குற்றவாளி சிறையில் மரணம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரே நேற்று (04) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்,  2022 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் இருவரைக் கொலை செய்த  ​குற்றத்துக்காக  பல்லேகல -தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .