2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு சென்ற மூவர் மாயம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கொத்மலை- இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளனர் என நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நேற்று (11) நுவரெலியாவுக்கு வந்துள்ளதுடன், இன்று மாலை 3.30 மணியளவில்  வவுனியாவுக்கு திரும்பிச் செல்லும் வழியில் இறம்பொடை  நீர்வீழ்ச்சியில் நீராடியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் பெய்து வரும் அடை மழையுடன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்ததால், 7 பேரும் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

எனினும் நால்வர் காப்பற்றப்பட்டுள்ளதுடன்.  மூவரைத் தேடும் பணிகளை பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X