2025 ஜூன் 23, திங்கட்கிழமை

எதிர்க்கட்சி தலைவர் மீது நம்பிக்கையுள்ளது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மறைந்த தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கம், முஸ்லிம்களை அரசியல் ரீதியாக அரவணைத்து சென்றதை போல, எதிர்க்கட்சி தலைவரும் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

கண்டி மாட்ட முஸ்லிம்கள் சார்பாக எதிர்க்கட்சி தலைவர்
ஆர்.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'1977ஆம் ஆண்டுக்கு பின் சிறுபான்மை சமூகத்துக்கு அரசியல் ரீதியாக கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி இதுவாகும். இதனூடாக தமிழ், முஸ்லிம் உறவு மேலும் நெருக்கமடைய வேண்டும்.

சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் தருணம் தற்போது இலங்கையில் மலர்ந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைலான அரசாங்கம், சிறுபான்மை சமூகத்துக்கு வழங்கிய அரசியல் ரீதியான வாக்குறுதிகளை நிறைவேற்றிவுள்ளது' என குறிப்பிடப்பட்டிருந்து.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .