2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

எரிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா, பரணகம மஸ்பென்ன பகுதியில், எரிகாயங்களுடன் ஆணின் சடலத்தை, பரணகம பொலிஸார் நேற்று மீட்டுள்ளதுடன், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

மஸ்பென்ன கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 67 வயது நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்து நபர் முன்தினம் இரவு, தனது நண்பருடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் அடுத்த நாள் காலை, எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி நபருடன் மது அருந்திக்கொண்டிருந்த நபரை, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X