2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கு தடை

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய- வெலஆர பிரதேசத்தில் உள்ள எல்லவெல நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெல்லவாய பிரசேதசபையில் இன்று (21) இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுள் அதிகமானவர்கள், கடந்த காலங்களில் குறித்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தவுள்ள பாதுகாப்பு சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ்,  பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுத்து, இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய பிரதேசத்தில் அனைவரையும் கவர்ந்த குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட பெருமளவான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகைத் தந்தாலும் அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக நேற்று (20) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அந்நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .