2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏழுகன்னியர் மலை விமான விபத்து; 46 வருடங்கள் பூர்த்தி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது.

1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் விபத்துக்குள்ளான போது, ​​அதன் பணியாளர் குழுவுடன் 191 பேர் விமானத்தில் பயணித்துள்ளடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.  இந்த விமான விபத்து இலங்கையில் நடந்த முதலாவதும் மோசமானதுமான  விமான விபத்து என்றும் பதிவு செய்யப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று இன்றும் நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுரு பொலிஸ் நிலையம்  முன்பாக நினைவுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .