2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒத்திகை பார்த்த குளவி: 73 மாணவர்கள் பாதிப்பு

Editorial   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது 73 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்குள் உள்ளாகி காயமடைந்து பசறை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களில் 18 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,   பசறை உள்ளூராட்சி மன்ற விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை செவ்வாய்க்கிழமை (20)  நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X