2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவன் மாயம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பிராவத்தை பகுதியிலுள்ள மாதன்ன குளத்துக்கு குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவன் காணாமற் போயுள்ளதாகவும் அவரைத் தேடிவருவதாகவும் வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை அறபிக் கல்லூரியில் கற்கும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன்> வெலிமடையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோதே குறித்த குளத்தில் குளிக்கச்சென்றபோது நீரில் முழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் குளிக்கச்சென்ற இன்னொருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .