2026 மே 06, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் மடக்கிப் பிடிப்பு

எம். செல்வராஜா   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை - தங்கமலை தோட்டத்தில், கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை, ஹப்புத்தளை பொலிஸார், இன்று (19) கைது செய்துள்ளனர்.  

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தக​வலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பின்னரே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இதன்போது, பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த கசிப்பு, தயாரிப்புக்காக பயன்படுத்தும் மூலப்பொருள்கள், உபகரணங்கள் போன்றவற்றையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.  

இந்தச் சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என்றும் 3 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருள்களே, இதன்போது மீட்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .