2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிரகரி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை

Editorial   / 2025 ஜூலை 21 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ 

 நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதிக காற்று மற்றும் கடுமையான மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரி மற்றும் ஸ்வான் படகு சவாரி திங்கட்கிழமை (21) முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது,  

நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் நுவரெலியா நகராட்சி மன்றத்தின் ஆலோசனையின் பேரில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கடுமையான மோசமான வானிலை காரணமாக நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக படகு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .