2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தலவாக்கலை நகரத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸாருக்கும் வாகனசாரதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சு.ஆ.வணிகதுங்கவின் ஆலோசனைக்கு அமைய, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு அதிகாரி கே.எம். சம்பத் குணதிலக்க, பொலிஸ்- மக்கள் தொடர்பாடல் அதிகாரிகள் வி.சுந்தர்ராஜ், பி.சி.மல்கமன ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் வாகன சாரதிகள் 250 பேர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தலவாக்கலை நகரில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இவ்வாகனங்களை முறையாக நிறுத்த உரிய இடவசதிகள் இன்றி பிரதான வீதிகளின் இரு மருங்குகளிலும்; நடைபாதைகளிலும் வானங்கள் நிறுத்தப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதேவேளை, முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் இடங்கள் தொடர்பாக சாரதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இச்சாரதிகளிடம் ஏற்படும் பிணக்குகளை நிவர்த்திக்கவும், கடை உரிமையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளையும், தனியார் பஸ்களையும் நிறுத்துவதை தவிர்க்க உடனடி தீர்வு எடுக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகன சாரதிகள் செயற்படக் கூடாது என்றும் போக்குவரத்து  பொலிஸ் பிரிவினர் சாரதிகளை கேட்டக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .