2025 மே 17, சனிக்கிழமை

குளவி கொட்டினால் 17 மாணவர்கள் பாதிப்பு

Editorial   / 2022 நவம்பர் 28 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர், இன்று (28) மதியம் 2.30 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் அருகிலிருந்த மரமொன்றில் கூடு கட்டியிருந்த குளவிகளே கலைந்து வந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 குளவி கொட்டுக்கு இலக்கான  ஆரம்ப பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .