Editorial / 2025 ஜனவரி 31 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்ஷபான தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (31) பணி புரிந்து கொண்டு இருந்த போது குளவி கொட்டுக்கு இலக்கிய நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத்தில் களைகளை அகற்றிக் கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்..
பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 75 வயதுக்கு உட்பட்டவர்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்த நான்கு பேரும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .